MUTHUSOM
CSS Drop Down Menu

தமிழில் இல்லாத தமிழ் எழுத்துக்கள் தமிழில் காட்டும் ஆதிக்கம்

ஆரம்ப வகுப்பில் படிக்கும் பிள்ளை ஒன்று பாடப்புத்தகத்தில் ஒ ள வை யா ர் என்று வாசிக்கும் போது நம்மில் எத்தனையோ பேர் அதனைத் திருத்தி அது அப்படி இல்லை அது 'அவ்வையார்' என்று சொல்லிக் கொடுத்திருப்போம். ஆனால் அத்தருணம் நாம் பிழை விட்டிருக்கிறோம் என இவ் வாசிப்பின் முடிவில் நீங்கள் உங்களையே வினாவிக் கொண்டால் அதுவே எனது எழுத்திற்குக் கிடைத்த வெற்றியாய் நான் எடுத்துக் கொள்கிறேன்.
என்ன தலைப்பு இது? தமிழில் இல்லாத தமிழ் எழுத்துக்களா? என்று என்னை நீங்கள் ஒருவிதமாய் பார்பபதையும் என்னால் உணரமுடிகின்றது!
முதலாவதாக......
'ஒ'' வுக்குப் பக்கத்தில் 'ள' எழுத்தைப் போட்டு 'அவ்' என்று பாவிக்கிறார்கள். உண்மையிலே தமிழில் ஒரு உயிரெழுத்துக்குக் பக்கத்தில் இன்னொரு உயிர்மெய் எழுத்துச் சேர்த்து ஒரு தனி ஒலி வடிவம் கொண்ட எழுத்து தோன்றுவதாய் அல்லது இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு கண்டுபிடிப்பதற்கான அவசியமும் தமிழில் இருப்பாதய் எனக்குத் தெரியவில்லை. அவ்வாறிருக்க 'ஒ'' வுக்குப் பக்கத்தில் 'ள' அச்சிடப்பட்டிருக்கும் போது பிள்ளை எப்படி அவ்வையார் என்று வாசிக்கமுடியும்? அது ஒ ள வை யா ர் என்று வாசிப்பதில் தப்பேதுமிருப்பதாய் தோன்றவில்லை. அப்படியானால் இலக்கணப் போலியுடன் எழுதும் 'அவ்வையார்' எனும் சொல்லைத் தமிழில் எப்படி எழுதுவது? என்ற அடுத்த வினாவை நீங்கள் கேட்க இடமளிக்காமலேயே விளக்கம் தரவேண்டியது இந்த இடத்தில் எனது கடமையாகிறது.
'க' எழுத்தின் ஓசையை ா எனும் தமிழ் குறியீடு எப்படி நெடிலாக்குகின்றதோ அதேபோன்றதொரு இன்னுமொரு குறியீடே ஒ எனும் எழுத்தின் ஓசையை 'அவ்' என்று மாற்றியமைக்கிறது. அந்தக் குறியீடுதான் சிலருக்கு மட்டும் தெரிந்த பலருக்குத் தெரியாத 'வெள்ளிக்கால்' எனும் குறியீடு. அனி வெள்ளிக்காலை எழுதுவது எப்படி எனப் பார்போம்! h போன்றே வெள்ளிக்காலும் தனித்து ஓசை தராத ஒரு குறியீடாகும் இது 'ள' போன்று 'ஒ' வின் உயரத்தில் பாதி உயரமுடையதாக எழுத வேண்டும்;








About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...